02nd December 2023 10:35:03 Hours
இலங்கை சிங்க படையணியின் படையலகுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2023 நவம்பர் 27 முதல் 30 வரை நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றதுடன், 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி சம்பியனாகவும், 21 வது சிங்கப் படையணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக லான்ஸ் கோப்ரல் ஜி.பீ.சி. பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், இறுதிப் போட்டியில் சிறந்த வீரருக்கான கிண்ணம் லான்ஸ் கோப்ரல் ஏ.தயாசிறி அவர்களுக்கு வழங்கப்பட்டது.