இராணுவ விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் படையணிகளுக்கு இடையிலான டிரையத்லொன் சம்பியன்ஷிப் போட்டியானது சந்திரிகா டேங்க் பண்டி (27) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 5 ஆவது தடவையாக படையணிகளுக்கு இடையில் டிரையத்லான் சம்பியன்ஷிப் போட்டியாக (ஆண்) 14 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 78 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சம்பியன்ஷிப்பில் 750 மீ நீச்சல், 20 கி.மீ சைக்கிள் சவாரி மற்றும் 5 கி.மீ. ஓட்டம் ஆகிய போட்டிகள் இடம் பெற்றதுடன் இப் போட்டியில் இலங்கை பொறியியலாளர் படையணி சம்பியன்ஷிப்பை வென்றது. 2016 ஆம் ஆண்டில் இடம் பெற்ற இறுதி போட்டிகளுக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் வரையறுக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இந்த போட்டியின் மூலம் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் 2019 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு புகழ் சேர்தனர்.
இறுதி மற்றும் விருது வழங்கும் நிகழ்விற்கு பிரதான அதிதியாக பாதுகாப்பு தலைமையக வளாக திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இப் போட்டியைக் காண பார்வையாளர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளின் முடிவுகள் பின்வருமாறு:
ஆண் (புதிய)
சிப்பாய் ஆர்.எம்.என்.எச் சுசிரிபால - எஸ்.எல்.எல்.ஐ.
லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.பி.பி ஆதிகாரி - வி.ஐ.ஆர்
கன்னர் ஜே.ஏ.டபில்யு.என் குமார – எஸ்.எல்.ஏ
ஆண் - சம்பியன்ஷிப்
சிப்பாய் ஜி.ஏ.சி.எஸ் விக்ரமஹாராச்சி – எஸ்.எல்.இ.எம்.இ
லான்ஸ் கோப்ரல் கே.எஸ். உதயங்க - ஜி.டபிள்யூ
சிப்பாய் டி.எம்.கே.பி தென்னகோன்- எஸ்.எல.இ.எம்.இ
குழு முடிவுகள்
சாம்பியன்ஸ்
1 ஆம் இடம் - எஸ்.எல்.ஏ.
2 ஆவது இடம் - வி.ஐ.ஆர் Running sports | Men Nike Footwear