Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2023 21:12:11 Hours

படையணிகளுக்கு இடையிலான வலைப்பந்து 2023ன் வெற்றி மகளிர் படையணி (ஏ) அணிக்கு

பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘ஏ’ அணியும் இலங்கை இராணுவ மகளிர் படையணி ‘பி’ அணியும் இறுதிப் போட்டியில் மோதின.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 22) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இப் போட்டிகளில் இலங்கை சமிக்ஞை படையணி அணி, இலங்கை இராணுவ மருத்துவ படையணி அணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி அணி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி அணி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 2 அணிகள் என 6 வலைப்பந்து அணிகளின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.

அன்றைய நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவ மகளிர் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி வரவேற்கப்பட்டார்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி ஆரவாரம் மற்றும் கரவொலிக்கு மத்தியில் ஆரம்பமானதுடன் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ‘ஏ’ அணியானது 28/16 என்ற புள்ளிகளை பெற்று சம்பியன்ஷிப்பை வென்றது.

பிரதம விருந்தினரால் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் தகுதிக்கான விருதுகளை வழங்கினார். விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ மகளிர் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.