21st October 2023 22:20:30 Hours
68 வது காலாட் படைபிரிவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் ஒக்டோபர் 18-19 திகதிகளில் தனது கட்டளையின் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கான கபடி போட்டியை ஏற்பாடு செய்தது.
6 வது கெமுனு ஹேவா படையணி கபடி அணியும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியும் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதுடன் கடுமையான போட்டியின் பின்னர் 6 வது கெமுனு ஹேவா படையணி வீர்ர்கள் வெற்றி பெற்றனர்.
68 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ இறுதிப் போட்டியை கண்டுகளித்து பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இறுதிப் போட்டியை 68 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பார்வையிட்டனர்.