06th October 2023 21:53:29 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது பதவியேற்பின் பின் 18 செப்டம்பர் 2023 அன்று குருநாகல் 583 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் செய்தார்.
நுழைவாயிலுக்கு வருகை தந்த அவரை 583 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி என் கே பெரேரா அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு நுழைவாயிலில் சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். 583 வது காலாட் பிரிகேட்டின் வருகையின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் அவர் குழு படம் எடுத்துகொண்டார்.
பின்னர், 583 வது காலாட் பிரிகேட்டின் தளபதி, 1 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 6 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர், படைப்பிரிவு மற்றும் படையலகுகளின் தற்போதுள்ள பணிகள் மற்றும் சவால்கள் தொடர்பான விரிவான விளக்கமொன்றை வழங்கினர்.
பயனுள்ள தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தைப் பெற்றுகொண்டு 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி படையினரிடம் நோக்கம், ஒழுக்கம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்,