Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2023 21:43:08 Hours

நேபாள தெற்காசிய சிந்தனைக் குழுமத்தில் கேணல் நளின் ஹேரத்தின் உரை

நவம்பர் 07 அன்று நேபாளத்தின் காத்மாண்டுவில் கொன்ராட் அடினாயர் ஸ்டிப்டுங் மற்றும் தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கேணல் நளின் ஹெரத் அவர்களினால் விரிவுரை ஆற்றப்பட்டது.

தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு என்பது தெற்காசியா முன்னணி சிந்தனைக் குழுக்களின் ஒரு குழுவாகும், இது பிராந்தியம் தொடர்பான குறிப்பிடத்தக்க தலைப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்கிறது. பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கு சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

“தொற்றுநோய்க்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு - நெருக்கடியில் உள்ள உலகம்” என்ற தலைப்பில் உரையாற்றிய கேணல் ஹேரத் அவர்கள், போர், வேலையின்மை, விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல்கள் போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது என்பதுடன், செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் வேலைகள் இழக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

தெற்காசிய நாடுகளில் அதன் தாக்கம் பற்றி விவாதிக்கும் போது, நிலவும் உலக சீர்கேடு குறித்த பங்கேற்பாளர்களின் கல்வி எல்லைகளை விரிவுபடுத்தும், சமகால மதிப்பைக் கொண்ட கருப்பொருளில் அவர் உரையாற்றினார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே தற்போது நடைபெரும் போர்களால் உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை கடந்து செல்வதற்கான வழிகள் குறித்து பல்வேறு தெற்காசிய நாடுகளின் வல்லுநர்கள் ஆலோசித்தனர்.

மத்திய கிழக்கு, குவாட், சீனாவின் பிஆர்ஐ, இந்து-பசிபிக், தாய்வான், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காலநிலை நெருக்கடி ஆகியவை புவிசார் அரசியல் சவால்கள் தொடர்பிலும் அவது உரையில் குறிப்பிட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தீபங்கர் பேனர்ஜி உட்பட பெண்களின் சிரேஷ்ட பாதுகாப்பாளர் மல்லிகா ஜோசப், இந்தியா பிரச்சினைகளின் முகாமை மற்றும் அமைதிக்கு அடித்தளமிட்ட அவதேஷ் மாத்தூர், சுவிட்சர்லாந்திற்கான நேபாளத்தின் முன்னாள் தூதுவர் ஷம்பு ராம் சிம்காடா, இந்தியாவின் கீதாமாதவன் ஆகிய புகழ்பெற்ற அறிஞர்கள் மாநாட்டின் போது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கேணல் ஹேரத் அவர்கள் சர்வதேச உறவுகளில் நிபுணராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளராகவும், பேச்சாலராகவும் மற்றும் திறமையான எழுத்தாளராகவும் காணப்படுகிறார்.