Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2023 20:23:03 Hours

நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு கொமாண்டோக்கள் பாராட்டு

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) கனேமுல்லையில் உள்ள கொமாண்டோ படையணி தலைமையகத்தில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.

கொமாண்டோ படையணி தலைமையக நிலைய தளபதி பிரிகேடியர் பி.எம்.எஸ்.கே.கே தர்மவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களினால் வரவேற்பதற்கு முன் நுழைவாயிலில் சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் நிலை உயர்வு பெற்ற அதிகாரிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

>அதன்பிறகு, வளாகத்தில் உள்ள கொமாண்டோக்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன், படையினருக்கான உரையில் போது, தன்னை ஊக்குவித்த முன்னால் மற்றும் சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் சில குழு படங்களையும் எடுத்துக்கொண்டார். ,

அன்றைய நிகழ்வுகள் தேநீர் விருந்துடன் நிறைவுக்கு வந்தன.

கொமாண்டோ படையணி தலைமையக நிலைய தளபதி பிரிகேடியர் பி.எம்.எஸ்.கே.கே தர்மவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.வி.ஐ.எல் ஜயவீர யுஎஸ்பீ, பேரவை உறுப்பினர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.