Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2023 00:14:47 Hours

நிலை உயர்வு பெற்ற இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதிக்கு பாராட்டு

இராணுவத் தளபதியிடமிருந்து நிலை உயர்வுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களுக்கு வேரஹெர இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினர், படைத் தலைமையக வளாகத்தில் மே 29 அன்று இராணுவ மரபுகளின்படி மரியாதை அளித்து வாழ்த்தினர்.

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் நிலையத் தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிநடை மரியாதையும் செலுத்தப்பட்டது.

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு தனது படையினருக்கு உரையாற்றியதுடன், அன்றைய நிகழ்வுகளின் முடிவைக் குறிக்கும் வகையில் அனைத்து நிலையினருடனான தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இந்த பாராட்டு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.