02nd November 2023 20:42:49 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோருக்கு நவுல விசேட படையணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (ஒக்டோபர் 31) பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற இரண்டு மேஜர் ஜெனரல்களுக்கும் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
பின்னர், வீரமரணம் அடைந்த அனைத்து விசேட படையணி போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், இரண்டு மேஜர் ஜெனரல்களும் தனித்தனியாக போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சிறப்பு மேடைக்கு அழைக்கப்பட்டு இருவருக்கும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. குழு படம் எடுத்தல் படையினருக்கு உரையாற்றல் என்பவற்றிலும் இருவரும் இணைந்து கொண்டனர்.
விசேட படையணியில் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியை குறிக்கும் வகையில் வளாகத்தில் மறக்க முடியாத நினைவை அடையாளப்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்வுடன் நிகழ்வு நிறைவுற்றது. பின்னர் தேநீர் விருந்துபசாரத்தின் போது, புதிதாக நிலை உயர்வு பெற்ற அதிகாரிகள் அதிகாரிகள் உணவகத்தில் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.