07th November 2023 20:13:28 Hours
நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பனாகொடை சம்பளம் மற்றும் பதிவேட்டு பணிப்பகத்திற்கு புதன்கிழமை (நவம்பர் 01) விஜயத்தை மேற்கொண்டார்.
அவரை நுழைவாயிலில் சம்பலம் மற்றும் பதிவேட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் என்.ஏ.எஸ்.சீ பெரேரா அவர்கள் வரவேற்றார். அதன்பின், சம்பலம் மற்றும் பதிவேட்டு பணிப்பக பணிப்பாளரால் பணிப்பகம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பின்னர், நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் சம்பலம் மற்றும் பதிவேட்டு பணிப்பகத்தினருடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
இறுதியில், கேணல் என்.ஏ.எஸ்.சி பெரேரா, மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால அவர்களுக்கு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். வருகை தந்த நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந்த நிகழ்வில் சம்பலம் மற்றும் பதிவேட்டு பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.