Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2023 22:10:30 Hours

தொப்பிகலை பொதுமக்களுக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 232 காலாட் பிரிகேட்டின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் தொப்பிகல பிரதேசத்தில் 150 தேவையுள்ள பொதுமக்களுக்கு 150 மூக்கு கண்ணாடிகளை விநியோகிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 28 அன்று புலிபாஞ்சகல் சுகாதார வைத்திய அதிகாரி காரியாளயத்தில் இடம் பெற்றது.

இந்த திட்டத்திற்கான அனுசரணையை இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜோர்ஜ் குணரத்ன ஒப்டிசியன்ஸ் லிமிடட் நிறுவனம் வழங்கியது.

மூக்குகண்ணாடிகள் வழங்குவதற்கு முன்னர் வருகை தந்த அனைவருக்கும் குளிர்பானம் மற்றும் பரிசோதனை ஆலோசனைகளுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட்படை பிரிவு மற்றும் 232 வது காலாட் பிரிகேட்டின் பணி நிலை அதிகாரிகள், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 232 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எ புஷ்பகுமார, 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மேஜர் பி.எம்.சி வன்னிநாயக்க, தெற்கு கோரளைபற்று பிரதேச செயலாளர் திரு. எஸ்.ராஜ்பாபு, ‘ஜேர்ஜ் குணரத்ன ஒப்டிசியன்ஸ் லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர்கள் திரு.லக்ஷ்மன் குணரத்ன மற்றும் திரு.சிறி அபேகுணரத்ன ஆகியோர் மற்றும் அப்பகுதி மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.