Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2023 12:11:32 Hours

தொண்டர் படையணி தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகம் திங்கட்கிழமை (05) பதவி விலகும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியான மேஜர் ஜெனரல் டப்ளியுஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்களுக்கு இராணுவ பிரியாவிடை வழங்கப்பட்டது.

வெளியேறும் தளபதியை தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டீகேஆர் சில்வா கேஎஸ்பீ வரவேற்றார். பிறகு, அவர் தனது அலுவலகத்தில் தனது கடமைகளை ஒப்படைப்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்பின், வெளியேறும் தளபதி தனது படத்தைத் திறந்து வைத்து, தளபதிகளின் மகத்தான மரபுக்கு தனது பதவிக்காலத்தை சேர்த்தார். வெளியேறும் தொண்டர் படையணி தளபதியின் தந்தை பல தசாப்தங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியாக பதவி வகிப்பதற்கு முன்னர் தொண்டர் படையணியின் 5 வது தளபதியாக பணியாற்றினார்.

அன்றைய தினதிற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் குழு படம் எடுத்துக் கொண்டதன் பின்னர் படையினருக்கு உரையாற்றும் போது தனது பதவிக் காலத்தில் அவருக்கு வழங்கிய தாராளமான உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரம் மற்றும் பிரியாவிடை இராபோசணம் என்பனவும் இடம்பெற்றன. இறுதியாக நினைவுச் சின்னம் தொண்டர் படையணியினரால் வழங்கப்பட்டது.

தொண்டர் படையணி பிரதி தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் டப்ளியுஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அண்மையில் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியாக பதவியேற்றார்.