07th November 2023 05:39:00 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரிகேடியர் எச்வீஏசோமவீர ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் முன் முயற்சியில் தேவிபுரம் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அமைய 'சிங்கள மொழி கற்பித்தல்' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வியாழக்கிழமை (02 நவம்பர் 2023) அன்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கமான அட்டவணையின் கீழ் இந்த கற்பித்தல் திட்டம் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் மற்றும் தமிழ் மொழியில் பயிற்சி பெற்ற சிப்பாய்களினால் வழிநடத்தப்படுகிறது.
முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தின் பயிற்றுவிப்பாளர் திரு.கே.ரகு உதயகுமார் மற்றும் சிறந்த சிங்கள ஆசிரியரான பீ.மாடசாமி ஆகியோர் ஆரம்பக் நிகழ்வில் கலந்துகொண்டனர்.