Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2024 15:27:40 Hours

தேசிய பேஸ்போல் சாம்பியன்ஷி-2024ல் இராணுவம் வெற்றி

தேசிய பேஸ்போல் சாம்பியன்ஷிப் – 2024 போட்டியானது 2024 ஜனவரி 06 - 21 வரை தியகம பேஸ்போல் மைதானத்தில் இடம்பெற்றதுடன் இப்போட்டி நாடு முழுவதும் உள்ள 19 அணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இராணுவ பேஸ்போல் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் கடற்படைக்கு எதிராக போட்டியிட்டு வெற்றயை தனதாக்கி கொண்டனர்.

கடற்படையின் 4 புள்ளிகளுக்கு 9 புள்ளிகளை பெற்று இராணுவ பேஸ்போல் அணி சம்பியன்ஷிப்பை தனதாக்கிக் கொண்டதுடன், கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

சாம்பியன்ஷிப்பின் தனி திறைமைகள் பின்வருமாறு:

சிறந்த வீரர்: இராணுவ புலனாய்வு படையணியின் கோப்ரல் கேஜேடிஎம் பிரியதர்ஷன

சிறந்த பிட்சர்: கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜிஜிகேகே மதுஷங்க

சிறந்த களத்தடுப்பாளர்: இராணுவப் புலனாய்வுப் படையணியின் பணிநிலை சார்ஜன் எஸ்எஸ் ரத்நாயக்க