24th June 2019 08:00:02 Hours
அக்கராயன்குளப் பிரதேசத்தின் 18ஆம் திகதி ஜூன் மாதம் மாலை 8.00 மணியளவில் தனியார் கற்றைநெறி மையத்தில் திடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 20ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையினர் இத் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இத் தனியார் கற்கைநெறி மையத்தின் தலைவர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பின் கீழ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுமுழுதாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் படையினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
மேலும் மின்சாரக் கசிவினால் இத் தீயானது கட்டடத்தில் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. bridge media | UOMO, SCARPE