05th June 2023 19:26:32 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேட் படையினர், திருகோணமலை கல்லாராவ புனித ஜோன்ஸ் ஆரம்பப் பாடசாலை மற்றும் சாகரபுர ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் செயற்திட்டத்தை 29 மே 2023 முன்னெடுத்தனர்.
இத்திட்டத்திற்கு திருமதி அமீஷா ஜெயக்கொடி அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் 221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டது. 27 மாணவர்களை கல்லாராவ பாடசாலைக்கு அழைத்து அவர்களுக்கு 270,000/= ரூபா பெறுமதியான 27 பாடசாலை உபகரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர், இத்திட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 221 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் விநியோக திட்டத்தில் கலந்து கொண்டனர்.