Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2023 20:00:48 Hours

தியத்தலாவையில் 7 வது இராணுவ பொலிஸ் படையணிக்கு புதிய வசதி கட்டடம்

இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தினை தியத்தலாவ 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முகாம் விஜயத்தின் போது திறந்து வைத்தார்.

அன்றைய பிரதம விருந்தினரால் பதாதை திறந்து வைத்ததுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது. ஒரு விசாலமான சாப்பாட்டு அறை, மதுபானசாலை, தொலைக்காட்சி அறை மற்றும் ஒரு சமையலறை மற்றும் பல அலகுகள் உட்பட அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த வசதி கூடம் கொண்டுள்ளது. இது நீண்ட கால இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தேவையை பூர்த்தி செய்கின்றது.

வருகை தந்த படைத் தளபதியினை 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்என்கே ஹலங்கொட யுஎஸ்பீ பீஎஸ்சி எல்எஸ்சி அவர்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்கப்பட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் அனைத்து நிலையினருக்கும் உரையற்றியதுடன் தகவல்தொடர்பு சரியான ஒருங்கிணைப்பைப் பராமரித்தல் மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு சேவைகளின் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அன்றை தினத்தின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று நட்டு படையினருடன் சில குழு படங்களை எடுத்துகொண்டார். 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்என்கே ஹலங்கொட யுஎஸ்பீ பீஎஸ்சி எல்எஸ்சி அவர்கள் வருகை தந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத்தளபதிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவ பொலிஸ் படையணி நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.