Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st July 2023 19:50:00 Hours

திட்டமிடல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

விஜயபாகு காலாட்படையணியின் பிரிகேடியர் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவ தலைமையகத்தின் திட்டமிடல் பணிப்பகத்தின் புதியபணிப்பாளராக வெள்ளிக்கிழமை (ஜூலை 28) கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய பணிப்பாளர், புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், மகா சங்க உறுப்பினர்களின் செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், ஒரு முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இதற்கு முன் இந்த பதவியில் நியமனம் வகித்த பிரிகேடியர் எம்டிஐ மஹாலேகம் டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் இப்போது இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளர், பிரிகேடியர் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதியாக பணியாற்றினார்.

திட்டமிடல் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.