03rd April 2020 19:30:22 Hours
இரண்டு வார காலமாக தியதலாவை, ரன்டம்பே, பெரியகாடு, போஹொட மற்றும் பல்லேகல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மருத்துவ நடைமுறைகள் முடிந்த பின்பு தரமான சான்றிதழ்களுடன் 288 பேர் இன்று (3) ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தத்தமது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நபர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இவர்களது காலி, கொழும்பு, கண்டி மற்றும் குருணாகல் பிரதேசங்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளுடனும் சிற்றூண்டி வசதிகள் வழங்கி வைத்து இவர்களை அவர்களுக்கு உரிய இடங்களிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இந்த நபர்களை பார்வையிடுவதற்கு கட்டளை அதிகாரிகள் இந்த இடத்திற்கு வருகை தந்து இவர்களை வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best Authentic Sneakers | UOMO, SCARPE