Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th March 2019 15:14:23 Hours

ஜூனியர் கல்லூரி மாணவ தலைவர் தினத்திற்கு பிரிகேடியர் அதபத்து அவர்கள் பங்கேற்பு

பிலியந்தல தம்பே மடபத பிலிப் ஆடிகல ஜூனியர் கல்லூரியின் மாணவ தலைவர் தினத்திற்கு 150 மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டும் நிகழ்வு (5) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பேச்சாளர், ஊடக பணிப்பாளர் மற்றும் பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு இந்த சின்னங்கள் சூட்டி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அதிதியாக இராணுவ ஊடக ஆலோசகரான திரு சிசிர விஜயசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடி, மாகாண கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றி பிரதம அதிதி ஜூனியர் பேண்ட் வாத்திய குழுவினரின் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்றுச் சென்றார். பின்னர் மங்கள விளக்குகள் ஏற்றி பாடசாலை அதிபரின் வரவேற்புரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் திருமதி கல்பனி திலகரத்ன அவர்களது வேண்டுகோளுக்கமைய இந்த நிகழ்விற்கு பிரிகேடியர் சுமித் அதபத்து மற்றும் திரு சிசிர விஜயசிங்க அவர்கள் இணைந்திருந்தனர்.

இந்த பாடசாலை அமைப்பதற்கு இராணுவ பொறியியலாளர் படையணி உதவிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ ஊடக பணியகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர் லெப்டினன்ட் கேர்ணல் ரஞ்சித் மல்லவாரச்சி, கெஸ்பேவ நகராட்சி கவுன்சிலர்கள். மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு ஆலோசகர்கள், பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர். buy shoes | nike air speed turf rose gold price per gram