07th November 2022 06:00:48 Hours
ஒக்டோபர் 25 ஆம் திகதி தெஹியத்தகண்டிய, செருப்பிட்டிய ஆரம்பப் பாடசாலையின் 55 வறிய மாணவர்களுக்கு நன்கொடையாளரின் அனுசரணையுடன் 53 வது படைப்பிரிவின் 532 வது பிரிகேட் படையினர் பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவரும் தங்களின் கற்றலுக்காக ரூபாய் 1750/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் பெற்றுக் கொண்டனர். 532 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமல் விக்ரமசேகர, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போதைய நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரச் சுமைகளைக் கருத்தில் கொண்டு அனுசரணையாளரான திரு அசங்க பெராரா அவர்களினால் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
நிகழ்வு முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 532 வது பிரிகேட் படையினரால் தயாரிக்கப்பட்ட சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. 532 வது பிரிகேடின் படையலகுகள் ஆர்வத்துடன் இத் திட்டத்திற்கு உதவி வழங்கினர்.