09th October 2022 18:40:39 Hours
இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வுபெறும் சிறந்த சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே, மேஜர் ஜெனரல் சாந்த ரணவீர மற்றும் பிரிகேடியர் உதய சேரசிங்க ஆகியோருக்கு பிரியாவிடை நிகழ்வு சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (05) இடம் பெற்றது.
வருகை தந்த மூன்று அதிகாரிகளுக்கும் நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு அவர்கள் கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இராணுவ சம்பிரதாய நிகழ்வாக வண்ணமயமான மற்றும் கண்ணியமான இராணுவ அணிவகுப்பு மரியாதை அணிவகுப்பு மைதானத்தில் ஓய்வுபெறும் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை நிறைவு பெற்ற பின்னர் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டதன் பின்னர், அதிகாரிகள் மற்றும் படையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் மாலை கஜபா படையணியின் அதிகாரிகளின் உணவகத்தில் முறையான பிரியாவிடை விருந்து ஆரம்பமாகியது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளின் சேவையை பாராட்டி இராணுவ தளபதியும், கஜபா படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், மூன்று தனித்தனி சிறப்பு நினைவுச்சின்னங்களை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் நிலைய தளபதி பிரிகேடியர் விஸ்வாஜித் வித்யானந்த மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.