13th September 2018 12:49:00 Hours
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டிற்கான ஐடிஎப் சக்கர நாற்காலி டெனிஸ் போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில் இலங்கை இராணுவ சக்கர நாற்காலி டெனிஸ் வீரர்கள் பங்கு பற்றி தங்கப் பதக்கங்களை பெற்று எமது நாட்டிற்கு பெறுமையை பெற்றுத்தந்தனர்.
இந்த இராணுவ வீரர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு புதன் கிழமை (12) ஆம் திகதி அழைத்து அவரது பணிமனையில் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கை இராணுவ கெமுனு காலாட் படையணியின் கோப்ரல் காமினி திசாநாயக, பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ.எஸ்.ஆர் தர்மசேன, கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஆர்.ஏ.எல்.எஸ் ரணவீர, கொமாண்டோ படையணியைச் சேர்ந்த கோப்ரல் என்.ஆர்.எல் ஜயசுந்தர போன்றோர் இராணுவ தளபதியால் கௌரவிக்கப்பட்டனர்.
இச் சந்தர்ப்பத்தில் இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க, இராணுவ சக்கர நாற்காலி டெனிஸ் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, டெனிஸ் சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் சிரான் அபேசேகர மற்றும் டெனிஸ் பயிற்றுவிப்பாளர் ஜகத் வெலிகல அவர்கள் இணைந்து கொண்டனர். Sports brands | Air Jordan