Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2022 08:53:34 Hours

சந்த ஹிரு சேயவில் இருபத்தெட்டு புத்தர் சிலைகள் வழிபாட்டிற்கு திறப்பு

சந்த ஹிரு சேய தூபியின் 'சலபத்தலமலுவ'வைச் சுற்றி 28 புத்தர் சிலைகள் வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (5) மாலை அனுராதபுரத்தில் வண. மகா சங்கத்திரின் ஆசியுடன் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையில் நடைப்பெற்றது.பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் விமானப்படை தளபதியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து நேற்றைய தினம் நாஉயன ஆரண்ய சேனாசனத்தில் இருந்து ஊர்வலமாக தூபி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு சந்த ஹிரு சேய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

புத்தர் சிலைகளை ஸ்தாபித்துடன் புத்த பூஜை மற்றும் போதி வந்தனம் உள்ளிட்ட மத அனுட்டாணங்கள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில் வண.மகா சங்கத்தினர் சமய நிகழ்ச்சிகளை நடத்தினர். வண. மகா சங்கத்தினரை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர் அனைத்து அழைப்பாளர்களையும் விழாவிற்கு வரவேற்று வரவேற்பு உரையை ஆற்றினர்.அன்றைய நிகழ்ச்சியில் தூபியை அண்டியுள்ள சந்த ஹிரு சேய புத்தர் விகாரையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை காலை வேளையில் திறந்து வைத்து பக்தர்களுக்கு தரிசனம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.அடமஸ்தான வணக்கஸ்தலத்தின் பீடாதிபதி கலாநிதி வண. பல்லேகம சிறினிவாச தேரர் தலைமையில் சமய நிகழ்வுகள் 300 பௌத்த பிக்குகள், அழைப்பாளர்கள் மற்றும் பக்தர்களின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.

நாஉயன மடத்தின் பிரதம பீடாதிபதி வண. அங்குல்கமுவ அரியநந்த தேரர் இந்த வைபவத்தின் போது அனுசாசனம் வழங்கினார்.அனுசாசனத்தை வழங்குதலின் போது வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரர், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பொறுப்பானவர்களின் மகத்தான பங்களிப்பு மற்றும் புனித வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சந்த ஹிரு தூபி மற்றும் புத்தர் சிலைகளின் முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு தெளிவுபடுத்தினார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வின் போது வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு சந்த ஹிரு தூபியை கையளித்தனர்.

இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நிகழ்விடத்திற்கு வருகைதந்து முன்னேற்ற நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.இன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் போது வண. மகாசங்கத்தினர், அரச அமைச்சர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.