27th September 2018 19:30:15 Hours
முல்லைத் தீவு பாதுகாப்பு படையினருக்கான சட்டப் பிரச்சினைகளை தீர்பதெப்படி தொடர்பிலான எண்ணக்கருவில் பிரபல்யம் வாய்ந்த சட்டத்தரணியான செல்வி மேதா த அல்விஸ் அவர்களின் தலைமையிலான கருத்தரங்கானது கடந்த வெள்ளிக் கிழமை (21) முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் கண்காணிப்பின் கீழ் இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் பல அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டதுடன் சட்ட ஆலோசனை இராணுவ நிர்வாகம் விவாகரத்திற்கான சட்ட ஒழுங்குகள் மற்றும் அவை தொடர்பான பத்திரங்கள் கையாள்கை போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்ட கருத்தரங்கு இடம் பெற்றது.
மேலும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அத்துடன் தொடர்பாடல் தொடர்பான விரிவுரைகளும் இடம் பெற்றன.
இக் கருத்தரங்கில் 59 64 மற்றும் 68ஆவது படைப் பிரிவூகளைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட படையினர்கள் உள்ளடங்களாக முல்லைத் தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைகளின் கட்டளை அதிகாரிகளும் பங்கேற்றனர். Sports Shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival