Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2023 18:24:01 Hours

கெமுணு ஹேவா சேவை வனிதையர் பிரிவினால் மத்திய மாகாணத்தில் மறைந்த கெமுணு ஹேவா படையணி போர்வீரர்களை கௌரவிப்பு

கெமுணு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கெமுணு ஹேவா படையணியின் உயிரிழந்த போர்வீரர்களை கௌரவிக்கும் நோக்கில் சனிக்கிழமை (ஜூலை 29) மத்திய மாகாணத்தில் உள்ள 31 உயிரிழந்த போர்வீரர் குடும்ப உறுப்பினர்களை மைலப்பிட்டி போர்வீரர் நினைவுத்தூபிக்கு அழைத்து கௌரவித்தனர்.

கெமுணு ஹேவா படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் திருமதி மனோரி வெலகெதர ஆகியோர் முதலில் மலர் வளையம் வைத்து நினைவுச் சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் போது அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு, சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. நினைவுப் பரிசாக பல புகைப்படங்களும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.

கெமுணு ஹேவா படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கெமுணு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.