25th April 2024 13:59:31 Hours
சகிப்புதன்மை 'பசுமை - ரயில் நடைபயணம்' இரயில்வே திணைக்களம் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்எஸ்என் விஜயகோன் என்டிசீ எஎடிஓ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையினர்களிடையே வலிமை மற்றும் தோழமையை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இநநடை பவனி போர் சேவை ஒத்துழைப்பு படையலகின் நூற்றுக்கணக்கான படையினரின் பங்கேற்புடன் 21 ஏப்ரல் 2024 இடம்பெற்றது.
கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதப் பாதையின் ஊடாக கல்லோய சந்தியிலிருந்து ஹிங்குராங்கொடை வரையில் இராணுவத்தினர் பெருமையுடன் அணிவகுத்துச் சென்றதுடன், மின்னேரிய குளத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற பொழுதுபோக்குடன் நிகழ்வு நிறைவுற்றது.
கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சகிப்புத்தன்மை அணிவகுப்பில் பங்கேற்றனர்.