Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 19:50:32 Hours

கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதி தளபதி 24 வது காலாட் படைப் பிரிவினரிடம் வழங்கல் விடயங்கள் தொடர்பாக புதுபிப்புகளை பெறல்

கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ அவர்களால் அம்பாறை 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் உள்ள வழங்கல் தொடர்பான தகவல்களைப் பெறும் நோக்கத்துடன் சமீபத்தில் விஜயத்தை மேற்கொண்டார்.

படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் அனைத்து அதிகாரிகளின் வரவேற்பிற்குப் பின்னர் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.பின்னர், அவர் பிரதேச படைப் பிரிவு ஊழியர்களுடன் படங்கள் எடுத்து கொண்டார்.

சந்திப்பின் போது, கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதியின் தளபதி மற்றும் படைப் பிரிவு பணி நிலை அதிகாரிகள், விநியோகச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், உபகரண பராமரிப்பு அட்டவணைகள் மற்றும் வள ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு வழங்கல் விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர். இப் படைப்பிரிவு எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களான அதன் பல்வேறு செயல்பாட்டு சூழல்கள் மற்றும் விரைவான வரிசைப்படுத்தல் தேவைகள் போன்றவற்றை எதிர்கொள்ள இந்த கூட்டு அணுகுமுறை இன்றியமையாததாகும் என்பதை சுற்றிகாட்டப்பட்டது.

அனைத்து பிரகேட் தளபதிகள், வழங்கல் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

மாலையில், கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ அவர்களால் 24 காலாட் படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் உணவகத்தில் அனைத்து பணியாளர்கள் மற்றும் வழங்கல் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. புறப்படுவதற்கு முன் கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதியின் தளபதி அவர்கள் 24 காலாட் படைப்பிரிவின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை கையெழுத்திட்டார்.