Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2023 19:04:01 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினரால் வெளியேறும் தளபதிக்கு வாழ்த்து

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பணியாற்றி வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களுக்கு வௌ்ளிக்கிழமை (ஓகஸ்ட் 11) அன்று கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.

கிழக்கு தளபதி தனது அலுவலகத்தில், பதவி துறந்தமை தொடர்பான ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக குழு படங்களை எடுத்துகொண்டதுடன் புதிய கிழக்கு தளபதி பதவி யேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், வெளியேறும் கிழக்கு தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் தனது குறுகிய பதவிக்காலத்தில் தமக்கு வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்காக அனைத்து தரத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். அவருக்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 22, 24 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளினால் பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

அதே நாள் மாலை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் காலாட்படை பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படை அலகுகளின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளாலும் வெளியேறும் கிழக்கு தளபதியை கௌரவிக்கும் வகையில் வழக்கமான பிரியாவிடை இரவு விருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு புனானி 23 வது காலாட் படைப்பிரிவில் உள்ள படையினரை சந்தித்து ஆதரவுக்காக அனைத்து நிலையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.