07th November 2023 05:31:38 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் 2023 நவம்பர் 2 – 3 திகதிகளில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகளுக்கான 2 நாள் செயலமர்வை நடாத்தியது.
இலங்கை இராணுவத்தின் சிவில் நிர்வாகம், நிர்வாகம் மற்றும் வளங்கல் தொடர்பாக இந்த செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
கட்டளை அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் மனித வள முகாமைத்துவம், சமூக முரண்பாடுகள்/ போதைப்பொருள் பாவனை மற்றும் இராணுவத்தினருக்கான பொது ஆலோசனைகள் மற்றும் இலங்கை இராணுவத்தில் படையினருக்கான நலன்புரி நடவடிக்கைகள் பற்றி இப் செயலமர்வில் விவரிக்கப்பட்டது. 'இலங்கை பொலிஸார் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு இராணுவ ஆதரவு' என்ற தலைப்பில் விசேட விரிவுரையினை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி அஜித் ரோஹன நிகழ்த்தினார்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ. குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இந் நிகழ்விற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.
இந்த பயிற்சி நிகழ்ச்சி 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது. இந்த செயலமர்வில் ஏறக்குறைய 50 கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுடன் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணியாற்றும் கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளுக்கு இதே பாடநெறி ஜூலை மாதம் முதல் கட்டமாக நடாத்தப்பட்டது.