Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2023 22:01:34 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கள விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் மார்ச் 21-22 திகதிகளில் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர்களின் நலன்களை விசாரிப்பதற்காக விஜயம் மேற்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) தாராவிக்குளம் 232 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் செய்த வேளை தளபதியை 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 232 வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் அசித்த புஷ்பகுமார ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

பின்னர், 232 வது காலாட் பிரிகேட் தளபதி பாதுகாப்பு மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கமளித்ததுடன், கிழக்குத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தொப்பிகல மரபுரிமை பூங்காவையும் பார்வையிட்டார். மேலும், அன்றைய தினத்தின் இறுதி விஜயமாக அவர் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கும் விஜயம் செய்தார்.

மறுநாள் (மார்ச் 22) பிரதம அதிதி சிங்கபுர 9 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் நாவலடி 6 வது கஜபா படையணிக்கும் விஜயம் செய்தார். அங்கு வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இரு படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர். இரு முகாம் நுழைவு வாயில்களிலும், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயத்தின் நினைவு அம்சமாக பிரதம அதிதி இரு வளாகங்களிலும் மாங்கன்றுகளையும் நட்டார். அதிதி பதிவேட்டு புத்தகங்களில் சில பாராட்டு குறிப்புகளை எழுதுவதற்கு முன்பு படையினருடன் குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

23 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 232 மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.