11th April 2024 14:51:16 Hours
மனித நலனில் அக்கறை காட்டும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர், அம்பாறை பிரதேசத்தில் உள்ள வரிய குடும்பமொன்றுக்கு அம்பாறை பிரதேசத்தில் உள்ள நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் புதிய வீடொன்றை நிர்மாணித்தனர். புதிய வீடு 07 ஏப்ரல் 2024 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது.
16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.பீ. டி சொய்சா கட்டுமானப் பணிகளுக்காக 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியைப் பயன்படுத்தி இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு முயற்சி எடுத்தார்.
திறப்பு நிகழ்வின் போது கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களினால் வீட்டுச் சாவி பயனாளிக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வின் போது பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விழாவில் பங்கேற்றனர்.