Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2018 13:19:16 Hours

கிளிநொச்சி படைத் தளபதி படைத் தலைமையகத்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் படைத் தலைமையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறும் நிகழ்வானது (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இக் கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்தின் முறை படி 24 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

வெளியேறும் இப்படைத் தளபதியவர்களால் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கொடி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

வெளியேறும் இப் படைத் தளபதியவர்கள் படைத் தலைமையகத்தில் இருந்து வெளியேறும் முன் ஆவணத்திலும் கையொப்பம் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறும் படைத் தளபதியன மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களால் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் 57 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் மற்றும் 65 மற்றும் 66 ஆவது படைப்பரிவின் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னோக்கி பராமரிப்பின் படைத் அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டானர்.

jordan release date | Nike Shoes