20th April 2023 20:50:13 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சிப் பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான ‘படையலகு ஆதரவு பாடநெறி - 96’ நிறைவில் சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை (ஏப்ரல் 19) இடம் பெற்றது.
காலாட் படை பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் ஜேஎம்டபிள்யூகே ஜயலத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத்தின் பல படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 43 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் மூன்று மாத காலப் பாடநெறியை பின்பற்றினர்.
3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த சார்ஜென் ஆர்ஜிஜி லக்மின அவர்கள் பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றார்.