06th June 2023 17:34:35 Hours
மின்னேரிய காலாட் பயிற்சிப் பாடசாலையின் படையினரால் தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, காலாட் படைப் பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை திங்கட்கிழமை (5) முன்னெடுத்தனர்.
சென்ரல் பினன்ஸ் தனியார் நிறுவனம் இந்த மரக்கன்றுகளை காலாட் படைப் பயிற்சிப் பாடசாலைக்கு வழங்கியது. காலாட் படைப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ,, அதிகாரிகள் மற்றும் காலாட் படை பயிற்சிப் பாடசாலையின் சிப்பாய்கள் பலர் இணைந்துக் கொண்டு மருதை, எசலா, வேப்பு, பாளை போன்ற மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
சென்ரல் பினன்ஸ் தனியார் நிறுவன பிராந்திய முகாமையாளர் திரு.சமிந்த ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.