14th June 2023 17:10:27 Hours
மேஜர் ஜெனரல் கேபீஎஸ்எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் காலாட் படைப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக (ஜூன் 09) இராணுவத் தலைமையகத்தில் மத ஆசிர்வாதங்களுடன் கடமை பொறுப்பேற்றார்.
புதிய காலாட் படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் அவர்கள் மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு, மங்கள விளக்கேற்றி சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் கேபீஎஸ்எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய நியமனத்திற்கு முன்னர் யாழ். 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியுள்ளார்.
இந் நிகழ்வில் காலாட் படைப் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணி நிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.