Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:37:36 Hours

காலாட்படை பயிற்சி நிலையத்தின் ஏவுகணை எதிர்ப்பு பாடநெறி -55 நிறைவு

ஏவுகணை எதிர்ப்பு பாடநெறி -55 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு டிசம்பர் 20 அன்று மின்னேரியா காலாட் படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியூஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

9 அதிகாரிகள் மற்றும் 31 சிப்பாய்கள் ஒரு மாத பாடநெறியினை பயின்றனர். 10 வது கஜபா படையணியின் இரண்டாம் லெப்டினன் கே.எம்.வை.டீ ஜயசேகர அவர்களுக்கு பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.