02nd November 2023 19:57:59 Hours
கலத்தேவ கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் கடந்த 2023 ஒக்டோபர் 16 - 20 ஆம் திகதிகளில் தனிசிறப்பு தொடர்பான பட்டறை நிறைவுபெற்றது.
இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டிதலின் கீழ் 19 இளம் அதிகாரிகள் இந்த பட்டறையில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுக்கான இப் பட்டறையில் அதிகாரிதுவம்,படையணி, ஒழுக்கம், சமூக ஒழுக்கம், தலைமைத்துவம், அதிகாரிகளின் தொழில் முன்னேற்றம் மற்றும் இலங்கைப் போர் வரலாறு தொடர்பான விடயங்கள் இடம்பெற்றன. இலங்கை கவச வாகன படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கை கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விரிவுரைகளை நடத்தினர்.
இலங்கை கவச வாகன படையணியில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் பிரதம விருந்தினரான குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்களின் பங்களிப்பில் இரவு விருந்துபசாரத்துடன் பயிற்சி பட்டறை நிறைவடைந்தது.