Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2022 05:15:48 Hours

கல்லடியில் 23 வது படைப்பிரிவின் படையலகுகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி

கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 23 வது படைப்பிரிவின் 2022 இன் படையலகுகளுகிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி ஒக்டோபர் 29 முதல் 30 வரை கல்லடி சிவானந்தா கல்லூரி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.

4 வது கெமுனு ஹேவா படையணி, 12 வது கெமுனு ஹேவா படையணி, 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி உட்பட்ட கூடைப்பந்து வீரர்கள் போட்டியில் போட்டியிட்டனர். 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி வீரர்கள் 12 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையணி வீரர்களை தோற்கடித்து சம்பியன்ஷிப்பை வென்றனர்.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் ஒத்துழைப்புடன் 23வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க அவர்கள் இந்த போட்டியை ஏற்பாடு செய்தார்.

23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களுடன் இணைந்து பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவைக் படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நேரில் கண்டுகளித்தனர்.