25th September 2023 07:06:53 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை சிங்க படையணி படையினர் கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தில் சமூக சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் படையினருக்கும் கிராமசேவை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை (17 செப்டம்பர்) முகாம் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமூகமான சந்திப்பின் போது, அப்பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களின் நிர்வாக விடயங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு படையினர் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ 521 வது காலாட் பிரிகேட் பதில் பிரிகேட் தளபதி லெப்டினன் கேணல் டிஜேபீ திக்கும்புர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 4 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீஆர்என்விகே பணங்கம ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.