Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2024 19:30:20 Hours

கண்டி மாவட்டத்தின் இலங்கை சிங்க படையணி முன்னாள் வீரர்கள் ஒன்று கூடல்

கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை சிங்கப் படையணியின் முன்னாள் வீரர்கள் 2024 ஜனவரி 27 ம் திகதியன்று கண்டி 2வது (தொ) சிங்க படையணியில் ஒன்றுகூடினர். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

படையணியின் படைத்தளபதி அவர்களினால் படைவீரர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டதினை தொடர்ந்து இந்நிகழ்வு ஆரம்பமாகியது. ஆண்டு முழுவதும் திட்டமிடப்பட்ட தொடர் நிகழ்வுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த தொடக்கக் கூட்டம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. படைவீரர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து பிணைப்பை வலுப்படுத்துவதே இந்தக் ஒன்றுகூடலின் முக்கிய நோக்கமாகும்.