06th April 2023 19:14:43 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் 572 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பகுதியிலுள்ள ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த 130 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உதவிப் பொருட்களை 2023 மார்ச் 30 வழங்கி வைத்தனர்.
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமல் பீரிஸ் அவர்களினால் அனுசரனையாளர்களான திரு. ஜீவந்த பெர்னாண்டோ மற்றும் தென்னிலங்கை டெரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோரின் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரபந்தனாறு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமல் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.