Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2022 07:34:58 Hours

கஜபா படையணி ஆண்டு நிறைவு நாளில் சாலியபுர தலைமையகத்தில் பிரித் பாராயண மற்றும் அன்னதான நிகழ்வு

சாலியபுர 'ஹோம் ஒப் கஜபா' படையணி தலைமையகத்தில் 39 வது ஆண்டு தினமான ஒக்டோபர் 14 கொண்டாடவுள்ளமையை முன்னிட்டு 'பிரித்' பாராயணம் மற்றும் அன்னதானம் வழங்குதல் ஒக்டோபர் 12 -13ம் திகதி கஜபா படையணி ஸ்தாபகத் தந்தையின் பாரியார் திருமதி மானெல் மங்கலிகா விமலரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் , இராணுவ சேவை வனிதாயர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே, மறைந்த மற்றும் காயமடைந்த கஜபா படையினரின் குடும்ப உறுப்பினர்கள், போர்வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்களின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் பாரம்பரிய நடனக் கலைஞர்களால் வண்ணமயமான ஊர்வலம், புனித நினைவுப் பேழை (கரண்துவ) மற்றும் பழைய நூல்தொகுப்பு (பிரிவான போத) ஆகியவற்றுடன் மகா சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களை எண்கோணமண்டபத்திற்கு (பிரித் மண்டபம்) அழைத்துச் சென்றதனை தொடர்ந்து சிரேஷ்ட பௌத்த துறவியால் தேசத்தின் வரலாற்றில் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இராணுவத் தளபதியாக கஜபா படையணி படைத் தளபதி ஆற்றிய முக்கிய பங்கை மிகவும் பாராட்டி சொற்பொழிவு வழங்கப்பட்டது. மகாசங்கத்தினரால் கஜபா படையணியில் உயிர்நீத்த மற்றும் காயமடைந்த அனைத்து போர்வீரர்களுக்கும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்துடன் படையணியின் எதிர்கால திட்டங்களுக்காக ஆசீர்வதித்தனர். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கஜபா படையணி நிலைய தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலர் 'பிரித்' பாராயண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரவு முழுதும் பிரித் பராயணங்களில் பங்குபற்றியவர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு மறுதினம் (13) காலை இராணுவத் தளபதியும் கஜபா படையணி படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் 'புத்த பூஜை' செய்த பின்னர் திருமதி ஜானகி லியனகே மற்றும் பலருடன் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சமய சடங்குகள் மற்றும் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு தளபதி புனித கலசத்தையும் எடுத்துச் சென்றார்.

கஜபா படையணி ஆரம்பித்த தினம் முதல் 2009 மே மாதம் மனிதாபிமான நடவடிக்கைகளின் உச்சம் வரை பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து முக்கிய இராணுவ நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்களித்துள்ளது. கஜபா படையணியின் 180 அதிகாரிகள் மற்றும் 4030 சிப்பாய்கள் நிரந்தர காயங்களுக்கு உள்ளான அதே வேளை 175 வீரமிக்க அதிகாரிகளும் 4075 துணிச்சலான சிப்பாய்களும் நமக்காக நன்னாளை உருவாக்குவதற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்.

2009 ஆண்டு முதல் படையணியின் அனைத்து படையலகுகளும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.