Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2024 20:27:12 Hours

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு பாராட்டு

ஓய்வுபெறும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் குடும்ப உறுப்பினர்களுடன் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

34 ஆண்டுகளுக்கும் மேலாக முன்மாதிரியான முறையில் இராணுவத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரி விரைவில் ஓய்வு பெறவுள்ளார். சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவரது குறிப்பிடத்தக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளை அவர் அர்ப்பணிப்புடன் அயராது நிறைவேற்றியதற்காக பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய அதிகாரியாகவும், போருக்குப் பிந்தைய சூழ்நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சக்கட்டத்தின் போதும் ஓய்வு பெற்றுபவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புப் பாத்திரங்களை அவர் நினைவு கூர்ந்தார்.

இராணுவத் தளபதி, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களுடன் இன்பங்களைப் பரிமாறிக் கொண்டார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களைக் கேட்டறிந்து, அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமையின் போது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் அவர் பாராட்டினார்.

தொடர்நது ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளைச் செய்வதில் கிடைத்த ஊக்கத்தைக் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்

மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1989 ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவ நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 32 இல் இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்னாக 1991 ஜனவரி 19 இல் இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார், இறுதியில் 04 பெப்ரவரி 2023 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது அவர் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்தார். 6 வது இலங்கை பீரங்கி படையணியின் புலனாய்வு அதிகாரி மற்றும் பெட்டரி கேப்டன் - 4 வது இலங்கை பீரங்கி படையணி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்சி பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி - 2 (பயிற்சி), இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவச் செயலாளர் கிளை புலனாய்வுப் பிரிவின் பணி நிலை அதிகாரி – 2 (பதில்), சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ கண்காணிப்பாளர், யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு) மற்றும் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 16 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி, காலாட் படை பயிற்சி நிலையத்தின் சிறப்பு இளம் அதிகாரிகள் பாடநெறியின் தலைமை பயிற்றுவிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பணிநிலை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் ஆய்வு மையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர், அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர், 241 காலாட் பிரிகேட் தளபதி, ரணவிரு செவன பிரதி தளபதி, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு) மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் போன்ற நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சூர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி, படையலகு புலனாய்வு அதிகாரி பாடநெறி,சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படை சட்ட பயிற்றுனர்கள் பாடநெறி, மனித உரிமைகள் பயிற்றுனர்கள் பயிற்சி பாடநெறி, பாதுகாப்பு ஆலோசகர் திசைமுகப்படுத்தல் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை அதிகாரி பாடநெறி, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி –இந்தியா, ஏஎன்பீடிகியூ 36 மோட்டார் லோகேட்டிங் பாடநெறி – அமெரிக்கா, அறிமுக அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் கற்கைகள் - இந்தியா, உயர் பீரங்கி பாடநெறி - இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி – பங்களாதேஷ் ஆகிய உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதிக் கற்கைகளில் முதுகலை டிப்ளோமா என்ற இராணுவம் அல்லாத பாடநெறியினையும் பயின்றுள்ளார்.