06th March 2023 08:40:47 Hours
ஓய்வுபெறும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 15 வது படைத் தளபதியும் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்கள் 35 வருடங்களுக்கும் மேலான முன்னுதாரணமான சேவையின் பின்னர், தனது கடமைகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மார்ச் 02 ஆம் திகதி பனாகொட இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை மரியாதையினை பெற்றார்.வருகை தந்த படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் அவர்களை சமிக்ஞை படையணியின் நிலைய தளபதி கேணல் கசுன் அதிகாரி வரவேற்றதனை தொடர்ந்து, பிரதான நுழைவாயிலில் இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் போர் வீரர்களின் நினைவு தூபியில் வீர மரணமடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தியவுடன், அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டு தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். பின்னர், அவர் அனைத்து படையினருக்கும் உரையாற்றியதுடன் ஓய்வு பெறும் படைத் தளபதிக்கு அவரது சேவையைப் பாராட்டி படையணி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைச் சேர்த்து வெளியேறும் படைத் தளபதி தனது இராணுவ வாழ்க்கையின் நிறைவு நிகழ்வாக தலைமையக அதிகாரிகளின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேணல்கள் தங்குமிடத் தொகுதியையும் திறந்து வைத்தார். பின்னர், அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் அவர் பிரதான வாயிலை நோக்கிச் சென்றபோது அவருக்கு இறுதி வீதி மரியாதை செலுத்தி கெளரவித்தனர்.