Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2024 17:17:24 Hours

ஓய்வு பெறும் இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அவரது அலுவலகத்தில் 2024 ஏப்ரல் 19 ம் திகதி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளை தவறாது அர்ப்பணிப்புடன் செய்தமைக்கு தனது பாராட்டினை தெரிவித்தார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியில் ஓய்வு பெற்றுபவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பாத்திரங்களை அவர் நினைவு கூர்ந்தார், அத்துடன் போருக்குப் பின்னர் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு கடமைகளை ஆற்றுவதில் தனக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இராணுவத் தளபதி, நாட்டை பாதுகாக்கும் அவரது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில், சிரேஷ்ட அதிகாரிக்கு குடும்பத்தினர் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்கு விசேட பரிசையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்

மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 02 இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி, தியத்தலாவையில் பாடநெறி இல 11 இல் இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர், 30 ஏப்ரல் 1990 இல் இரண்டாம் லெப்டினன்னாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் இறுதியில் 25 ஜூன் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியாக பதவி வகித்தார். 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழு தளபதி மற்றும் கட்டளை அதிகாரி, 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பணி நிலை அதிகாரி 3 (பயிற்சி), இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பணி நிலை அதிகாரி 2 (ஆட்சேர்ப்பு), 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 22 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, 551 வது காலாட் பிரிகேட் மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, ரணவிரு வள நிலையத்தின் சிரேஷ்ட பயிற்சி அதிகாரி, இராணுவ தலைமையக புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஆலோசனை அதிகாரி, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை ஒருங்கிணைப்பு சிவில் விவகார அதிகாரி, 54 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்), இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கேணல் (நிர்வாகம்), இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரிகேடியர் (நிர்வாகம்), முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்) மற்றும் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்) மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பயிற்சிப் பரிசோதகர் போன்ற நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘கார்யக்ஷம சேவை பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.

அணி தளபதிகள் பாடநெறி (ஆயுத கட்டம்), அணி தளபதிகள் பாடநெறி (தந்திரோபாய கட்டம்), அணி தளபதிகள் பாடநெறி (தாக்குதல் கட்டம்), இளம் அதிகாரி பாடநெறி, படையலகு கணக்கியல் அதிகாரிகள் பாடநெறி, படையலகு நிர்வாக அதிகாரிகள் பாடநெறி, உளவியல் செயல்பாடுகள் பாடநெறி, உயர் சிவில் விவகார பாடநெறி மற்றும் இந்தியா கனிஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டபடிப்புகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் முடித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில் உறவுகள் மற்றும் மனிதவள முகாமை முதுமாண, தொழில் உறவுகள் மற்றும் மனித வள முகாமையில் பட்டபின் கல்வி டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழக உயர் டிப்ளோமா குடும்ப ஆலோசனை, இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் மனித வள முகாமைத்துவ சான்றிதழ், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனத்தில் உயர் சான்றிதழ், போதைப்பொருள் ஆலோசனைக்கான சான்றிதழ் – தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை, கொழும்பு, அனர்த்த முகாமைத்துவ சான்றிதழ் - இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம், கொழும்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்கான சான்றிதழ் - தேசிய இளைஞர் நிலையம், மஹரகம போன்ற இராணுவம் அல்லாத கற்கைகளையும் கற்றுள்ளார்.