Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2023 08:40:23 Hours

ஓய்வுபெறும் மூன்று கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பிரியாவிடை

சாலியபுர கஜபா படையணி தலைமையகம் அதன் சிரேஷ்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள மூன்று அதிகாரிகளான மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ, பிரிகேடியர் டிஎம் ஹெட்டியாராச்சி ஆர்எஸ்பீ மற்றும் பிரிகேடியர் டிஎம்ஆர்பி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை (07) பிரியாவிடை நிகழ்வை வழங்கியது.

மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பி என்டியூ, 'மோகன் ரத்நாயக்க' என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பணியாற்றியதுடன், பிரிகேடியர் டிஎம் ஹெட்டியாராச்சி ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளராகவும், பிரிகேடியர் டிஎம்ஆர்பி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 111 வது காலாட் பிரிகேடின் தளபதியாகவும் பதவி வகித்தனர்.

சாலியபுர கஜபா படையணி தலைமையக வளாகத்தில் இராணுவ மரபுகளுக்கு அமைவாகவும் மரியாதையுடனும் நடைபெற்ற வைபவத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு கஜபா படையணி ஸ்தாபக தலைவர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கஜபா படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் கேஆர் கலுபஹன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகளை வரவேற்றதுடன் கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் அணிவகுப்பு நிறங்களுடன் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்ய அவர்களை அழைத்தார். அவர்கள் மூவரும் அணிவகுப்பு மைதானத்தில் தனித்தனியாக படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் சிறப்பு மேடையில் இருந்து மரியாதையினை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக படையணியின் தலைமையகத்தில் சிப்பாய்களின் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தும் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியும் கஜபா படையணியின் படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பங்குபற்றலுடன் அதிகாரிகள் உணவகத்தில் இடம்பெற்ற இரவு விருந்துடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.