Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2022 16:27:43 Hours

ஓய்வுபெறும் முதலாம் படையணி தளபதிக்கு 58 வது படைப்பிரிவில் வரவேற்பு மரியாதை

ஓய்வுபெறும் முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன, திங்கட்கிழமை (12) புத்தளத்திலுள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தனது இறுதி விஜயத்தை மேற்கொண்டார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, படையினரை சந்திப்பதற்கு முன் பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் வரவேற்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே மற்றும் கட்டளையின் கீழ் உள்ள படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

பின்னர் அவர் ஆற்றிய உரையின் போது, தனது பதவிக் காலத்தில் ஆதரவளித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உரையின் முடிவில், 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, பதவி விலகும் முதலாம் படைத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், அவரது ஒத்துழைப்பைப் பாராட்டினார்.

அன்றைய நிகழ்விற்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதலாம் படைத் தளபதி பின்னர் படையினருடன் இணைந்து தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.