Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2022 20:00:00 Hours

ஓய்வுபெறும் மத்திய பாதுகாப்புப் படைத் தளபதிக்கு மரியாதை

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக இருந்து ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களுக்கு திங்கட்கிழமை (7) உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வின் போது, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில், இராணுவ மரபுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டது.

தளபதியின் வருகையின்போது நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவருக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் பிரியாவிடைக்கான அணிவகுப்பு மரியாதையை வழங்கப்பட்டது.

தளபதியின் உத்தியோகபூர்வ படையினருக்கான உரையின் போது, தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்கு அனைத்து படையினர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே நேரம் வருகின்ற தளபதிக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தினார். பின்னர் குழு புகைப்படங்கள் மற்றும் தேநீர் விருந்துபசாரங்களுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

மத்திய முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பிரிவின் தளபதி, படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.