Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2023 21:43:54 Hours

ஓய்வுபெறும் மத்திய தளபதிக்கு தியத்தலாவ படையினர் பிரியாவிடை

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஜூன் 29 அன்று ஓய்வுபெறும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களுக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் கஜபா படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு முன்பு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மேஜர் ஜெனரல் டப்ளியூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் படையினருக்கு உரையாற்றியதுடன் தனது பதவிக்காலத்தில் அவருக்கு வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்காக அனைத்து நிலையினருக்கும் நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அனைவருடனும் உரையாடினார்.

நிகழ்வின் இறுதியில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு பாராட்டுச் சின்னங்களாக நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

11 மற்றும் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.